Press "Enter" to skip to content

4-வது வெற்றி யாருக்கு?- ராஜஸ்தான்-குஜராத் இன்று பலப்பரீட்சை

இரு அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் உள்ளன.

மும்பை:

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடபெற்று வருகிறது. 20-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 24 -வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் உள்ளன.இதனால் 4- வது வெற்றியை பெறப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணி ஐதராபாத்தை 61 ஓட்டத்தை வித்தியாசத்திலும், மும்பையை 21 ரன்னிலும், லக்னோவை 3 ரன்னிலும் வீழ்த்தி இருந்தது. பெங்களூர் அணியிடம் 4 மட்டையிலக்குடில் தோற்றது.

குஜராத் அணி லக்னோ, டெல்லி, பஞ்சாப் ஆகியவற்றை தொடர்ச்சியாக தோற்கடித்தது. ஐதராபாத்திடம் வீழ்ந்தது. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »