Press "Enter" to skip to content

தோல்விக்கு நானே முழு பொறுப்பு – ரோகித் சர்மா

மும்பைக்கு எதிராக ஆடிய 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் 60 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 103 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை:

ஐ.பி.எல். போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சின் சோகம் தொடர்கிறது. நேற்றைய ஆட்டத்தில் அந்த அணி 18 ஓட்டத்தை வித்தியாசத்தில் லக்னோவிடம் தோற்றது. மும்பை அணி தொடர்ந்து 6-வது தோல்வியை தழுவியது. 

நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், மும்பை அணியின் தொடர் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற கடுமையாக போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »