Press "Enter" to skip to content

ஐபிஎல்: பஞ்சாப் அணியை 115 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மட்டையிலக்கு கீப்பர் ஜிதேஷ் சர்மா 32 ஓட்டங்கள் அடித்தார்.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் மட்டையாட்டம் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்து 115 ஓட்டங்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 32 ஓட்டங்கள் சேர்த்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 24 ஓட்டங்கள், ஷாருக் கான் 12 ஓட்டங்கள், ராகுல் சாகர் 12 ஓட்டங்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

டெல்லி தரப்பில் கலீல் அகமது, லலித் யாதவ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 மட்டையிலக்கு எடுத்தனர். 

இதையடுத்து 116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »