Press "Enter" to skip to content

அதிக முறை டக் அவுட் – ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் மோசமான சாதனை

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் சென்னை அணியின் சார்பில் பந்து வீசிய முகேஷ் சவுத்ரி 3 மட்டையிலக்கு வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மும்பை:

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதின. முதலில் மும்பை அணி மட்டையாட்டம் செய்ய களமிறங்கியது. 

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார்.

இது ஐ.பி.எல். போட்டிகளில் ரோகித் சர்மாவின் 14-வது டக் அவுட்டாகும். இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »