Press "Enter" to skip to content

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5-வது வெற்றி பெறுமா? டெல்லியுடன் இன்று மோதல்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

மட்டையாட்டம்கில் ஜோஸ் பட்லர் ஹெட்மயர் சஞ்சு சாம்சன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளது. பந்து வீச்சில் சாஹல், மிகுதியாக பகிரப்பட்டது போல்ட், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா உள்ளனர். இதில் கடந்த ஆட்டத்தில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சாஹல் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தினார். டெல்லி அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மட்டையாட்டம்கில் டேவிட் வார்னர் பிரித்விஷா, கேப்டன் ரி‌ஷப்பண்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், கலில் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை 115 ஓட்டத்தில் சுருட்டியதால் டெல்லி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

டெல்லி அணி 4-வது வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »