கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்து அசத்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராள சுப்மன் கில் – சகா ஆடினார். 7 ஓட்டத்தில் கில் வெளியேறினார். அடுத்ததாக குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சகாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
குஜராத் அணி 83 ஓட்டங்கள் இருக்கும் போது உமேஷ் யாதவ் பந்து வீச்சில் சகா 25 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்த வந்த டேவிட் மில்லர் 27 ஓட்டத்தில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய பாண்ட்யா அரை சதம் அடித்தார். 69 ஓட்டங்களில் இருந்த அவர் சவுத்தி பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ஓட்டத்தில் வெளியேறினார்கள். தெவாட்டியா 17, ரஷித் கான் 0, அபினவ் மனோகர் 2, பெர்குசன் 0, டயல் 0 என அடுத்தடுத்து வெளியேற குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 மட்டையிலக்குடுகளை இழந்து 156 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால் கொல்கத்தா அணி 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கும்.
கொல்கத்தா அணி தரப்பில் ரசல் 4 மட்டையிலக்குடும், சவுத்தி 3 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar