Press "Enter" to skip to content

செர்பியா ஓபன் – ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஆண்ட்ரே ரூப்லெவ்

டென்னிஸ் தரவரிசையில் உலக அளவில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை போராடி வீழ்த்தி ஆண்ட்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

பெல்கிரேட்:

செர்பியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் மோதினர்.

முதல் செட்டை ஆண்ட்ரே ரூப்லெவ் 6- 2 என எளிதில் வென்றார். இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சுதாரித்து ஆடிய ரூப்லெவ் 6-0 என கைப்பற்றினார்.

இறுதியில், ரூப்லெவ் 6-2, 6-7(4), 6-0 என்ற செட் கணக்கில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த போட்டி மொத்தம் இரண்டு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்றது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »