சென்னை அணி பஞ்சாப்பிடம் ஏற்கனவே தோற்று இருந்ததால் அதற்கு இன்று பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் மட்டையாட்டம் செய்கிறது.
சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷாருக்கான், நாதன் எல்லிஸ், வைபவ் அரோரா ஆகியோருக்குப் பதிலாக சந்தீப் ஷர்மா, ரிஷி தவான் மற்றும் பனுகா ராஜபக்சே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப்பிடம் ஏற்கனவே தோற்று இருந்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ளதால் இன்றைய போட்டி சிஎஸ்கே அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar