ஐபிஎல் போட்டியில் ஆயிரம் டாட் பந்துகளை வீசி சாதனையை படைக்கும் 13-வது வீரர் என்ற பெருமையை பிராவோ பெற்றுள்ளார்.
மும்பை:
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது.
15-வது வருடமாக நடைபெறும் ஐபிஎல் தொடரில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றனர். இதில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பிராவோ சென்னை அணிக்காக 2011 ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் பந்துவீச்சின் போது பிராவோ ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் டாட் பந்துகளை (ரன் விட்டு கொடுக்காத பந்து) வீசி சாதனை படைத்தார்.
ஐபிஎல்-லில் இந்த சாதனையை படைக்கும் 13-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அதிக டாட் பந்துகளை வீசி முதல் இடத்தில் இந்தியாவின் புவனேஸ்வர்குமார் உள்ளார்.
மேலும் இந்த பட்டியலில் அஸ்வின், நரேன், மலிங்கா, ஹர்பஜன், பும்ரா உள்ளிட்டோர் உள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar