Press "Enter" to skip to content

ஐபிஎல் 2022- கொல்கத்தா அணியை 146 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது டெல்லி

கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 மட்டையிலக்குடுகளும், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 மட்டையிலக்குடுகளும் எடுத்தனர்.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டெல்லி அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 57 ஓட்டங்கள் குவித்த நிலையில் மட்டையிலக்குடை இழந்தார். ரிங்கு சிங் 23 ஓட்டங்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 146 ஓட்டங்கள் சேர்த்தது.

டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 மட்டையிலக்குடுகளும், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 மட்டையிலக்குடுகளும் எடுத்தனர். 

இதையடுத்து 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »