ஐபிஎல் தொடரின் ஒரு பருவத்தில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் டெல்லி அணியை சேர்ந்த குல்தீப் யாத்வ் இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2022 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 4 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விலங்கிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அவர் 3 ஓவர்களை வீசி 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். 4 ஓவரையும் அவர் வீசியிருந்தால் 5 மட்டையிலக்குடை கைப்பற்றி இருக்கலாம். ஆனால் பந்து ஈரமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியதாக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றியதன் மூலம் குல்தீப் யாதவ் 8 போட்டிகளில் விளையாடி 17 மட்டையிலக்குடுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியில் அதிக மட்டையிலக்குடுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சாஹால் உள்ளார். இவர் 8 போட்டிகளில் விளையாடி 18 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி உள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றதன் மூலம் ஒரு பருவத்தில் அதிக முறை ஆட்ட நாயன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார்.
ஒரு பருவத்தில் அதிக முறை ஆட்ட நாயன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியல்:-
5 விராட் கோலி – 2016
4 குல்தீப் யாதவ் – 2022
4 ருதுராஜ் கெய்வாட் – 2021
4 ரோகித் சர்மா – 2016
4 அமித் மிஸ்ரா – 2013
4 சச்சின் தெண்டுல்கர் – 2010
4 யூசப் பதான் – 2008
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar