ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
புனே:
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்திருந்தது. போட்டி நிறைவுக்கு பின்னர் லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
நாங்கள் முட்டாள்தனமான கிரிக்கெட்டை விளையாடினோம். முதல் பந்துவீச்சு சுற்றுஸின் முடிவில் நான் ஏமாற்றமடைந்தேன், எரிச்சலடைந்தேன்.
நாங்கள் இன்னும் சிறப்பாக மட்டையாட்டம் செய்ய வேண்டும். நாங்கள் புத்திசாலித்தனமாக மட்டையாட்டம் செய்திருந்தால், 180 முதல் 190 வரை எடுத்திருக்கலாம்.
விளையாட்டை படிப்பதில் நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தவறான ஷாட்களை விளையாடாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.
போட்டி முழுவதும் குருணால் சிறப்பாக செயல்பட்டார். இந்த பருவத்தில் அவர் தனது பந்துவீச்சில் முழு உழைப்பை செலுத்தி உள்ளார். ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்காமல் பந்து வீசுவது முக்கியமானது, அவர் நடுத்தர ஓவர்களில் இரண்டு மூன்று மட்டையிலக்குடுகளை எங்களுக்குக் கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar