Press "Enter" to skip to content

மில்லர், திவாட்டியா அதிரடி – பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத்தின் மில்லர், திவாட்டியா ஜோடி 5-வது மட்டையிலக்குடுக்கு 79 ஓட்டங்கள் சேர்த்தது.

மும்பை:

15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் மும்பையில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் மட்டையாட்டம் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 170 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோலி, ரஜத் படிதார் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 33 ஓட்டங்கள் எடுத்தார்.

குஜராத் சார்பில் பிரதீப் சங்வான் 2 மட்டையிலக்கு, ஷமி, ரஷீத் கான், பெர்குசன், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து, 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சஹா, ஷுப்மான் கில் ஜோடி 50 ரன்களை கடந்தது.

சஹா 29 ரன், ஷுப்மான் கில் 31 ரன், சாய் சுதர்சன் 20 ரன், ஹர்திக் பாண்ட்யா 3 ஓட்டத்தில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய டேவிட் மில்லர், ராகுல் திவாடியா ஜோடி பொறுப்புடன் ஆடியது.

இறுதியில், குஜராத் அணி 4 மட்டையிலக்கு இழப்புக்கு 174 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 39 ரன்னும், திவாட்டிய 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 8 வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »