மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் மீண்டும் அரை சதமடித்து அசத்தினார்.
மும்பை:
15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடினார்.
தேவ்தத் படிக்கல் 15 ரன்னும், சஞ்சு சாம்சன் 16 ரன்னும், மிட்செல் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். 16-வது ஓவரின் முதல் 4 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 67 ஓட்டத்தில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய அஸ்வின் 9 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 6 மட்டையிலக்கு இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar