Press "Enter" to skip to content

ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ், கான்வே… சென்னை அணி 202 ஓட்டங்கள் குவிப்பு

பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

புனே:

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் மட்டையாட்டம் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டத்தை குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர். 

பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது பிரிந்தது. ருதுராஜ் 99 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். கான்வே ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள் விளாசினார். டோனி 8 ஓட்டங்களில் மட்டையிலக்குடை இழந்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 2 மட்டையிலக்குடுகளை இழந்து 202 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து 203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »