Press "Enter" to skip to content

ரிங்குசிங், பந்து வீச்சாளர்களுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு

வலை பயிற்சியில் உமேஷ் யாதவுக்கு எதிராக மட்டையாட்டம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது.

முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்புக்கு 152 ஓட்டத்தை எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ஓட்டத்தை எடுத்தார்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஆரோன் பின்ச் 4 ரன்னிலும், பாபா இந்திரஜித் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 34 ஓட்டத்தை எடுத்து அவுட் ஆனார். அதன்பின் நிதஷ் ராணா ரிங்கு சிங் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது.

நிதிஷ் ராணா 48 ரன்னுடனும், ரிங்குசிங் 42 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:

பவர்பிளேவில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பவர்பிளேயில் 36 ரன்களை விட்டு கொடுத்து மட்டையிலக்குடை கைப்பற்றினர். அது போன்ற தொடக்கம் தான் எங்களுக்கு தேவைப்பட்டது.

உமேஷ் யாதவ், கடினமான நீளங்களை வீசுகிறார். அவர் தனது வேகத்தை அதிகரித்துள்ளார். வலை பயிற்சியில் அவருக்கு எதிராக மட்டையாட்டம் செய்வது மிகவும் கடினம். அவரிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. அதை அறிவது மிகவும். கடினம்.

ஒரு கேப்டனாக நீங்கள் அவருக்கு பந்தை கொடுக்கும் போது அவர் எப்போதும் திட்டங்களை செயல்படுத்த தயாராக இருப்பார். சுனில் நரேன் அணிக்கு ஒரு பெரிய சொத்து. அவரிடம் நான் எப்போது பந்தை கொடுக்கிறேனோ மட்டையிலக்குடுகளை எடுக்க தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் மிகவும் சிக்கனமான பந்து வீச்சாளராக இருக்கிறார். அவர் பெரிய மட்டையிலக்குடுகளை கைப்பற்றுகிறார்.

ரிங்கு சிங்கை பற்றி நான் டிரசிங் அறையில் சக வீரர்களுடன் பேசி கொண்டிருந்தேன். அவர் தனது 2வது அல்லது 3வது ஆட்டத்தில் விளையாடும்போது, நெருக்கயான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருந்த விதம் மிகவும் சிறப்பானது. அந்த சூழலில் நிதிஷ்ராணாவுடன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது பாராட்ட வேண்டிய விஷயம். எதிர்காலத்தில் ரிங்கு சிங் அணிக்கு ஒரு சிறந்த சொத்தாக இருப்பார் என்றார்.

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சுசாம்சன் கூறும்போது, ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. அவர்கள் (கொல்கத்தா) நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் கடைசி கட்டத்தில் நாங்கள் சில பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும்.

15 முதல் 20 ஓட்டங்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் போராட்டத்தை வெளிப்படுத்தினோம். மட்டையாட்டம்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றார்.

கொல்கத்தா அணி 4வது வெற்றியை (10 ஆட்டம்) பெற்றது. ராஜஸ்தான் 4வது தோல்வியை (10 ஆட்டம்) சந்தித்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »