Press "Enter" to skip to content

சாய் சுதர்சன் அரை சதம் – பஞ்சாப் அணி வெற்றி பெற 144 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை சேர்ந்த ரபாடா சிறப்பாக பந்து வீசி 4 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

மும்பை:

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 9 ரன், விருத்திமான் சஹா 21 ஓட்டத்தில் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »