Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட்- 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

முதலில் விளையாடிய குஜராத் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 65 ஓட்டங்கள் குவித்தார்.

மும்பை:

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 9 ரன், விருத்திமான் சஹா 21 ஓட்டத்தில் அவுட்டாகினர். அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 65 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16 சுற்றுகள் முடிவில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 145 ஓட்டங்கள் அடித்து 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணி வீரர் ஷிகர் தவான் 62 ரன்களும், லிவிங்ஸ்டோன் 30 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.  பானுகா ராஜபக்சே 40 ஓட்டங்கள் எடுத்தார்.  

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »