Press "Enter" to skip to content

சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா? பெங்களூருடன் இன்று மோதல்

49-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஆட்டத்தில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென்றால் எஞ்சிய 5 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

கடந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் கொடுத்தார். சென்னை அணி மட்டையாட்டம்கில் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, அம்பதிராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்துவீச்சில் முகேஷ் சவுத்ரி சிறப்பாக உள்ளார். மேலும் ஜடேஜா, சான்ட்னர் தீக்‌ஷனா ஆகியோர் உள்ளனர்.

சென்னை அணியின் பீல்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும்படி இருக்கிறது. எளிதான கேட்சுகளை தவற விட்டனர். இதனால் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பெங்களூரு அணி 10 ஆட்டத்தில் 5 வெற்றி, 5 தோல்வி பெற்றுள்ளது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு கடந்த 3 போட்டிகளில் தோற்றது. இதனால் தோல்வி பாதையில் இருந்து மீண்டுவர முயற்சிக்கும்.

அந்த அணியில் விராட் கோலி, மேக்ஸ்வெல், பட்டிதார் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஹசில்வுட், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர். கேப்டன் டுபெலிஸ்சிஸ் மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியம்.

இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் சென்னை 23 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »