Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் – நடப்பு தொடரில் அதிவேகமாக பந்துவீசி உம்ரான் மாலிக் புதிய சாதனை

நேற்றைய போட்டியில் உம்ரான் மாலிக் இந்த போட்டியில் 4 ஓவர்களில் 52 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை:

15-வது ஐபிஎல் பருவம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி டெல்லி அணி முதலில் மட்டையாட்டம் செய்து 207 ஓட்டங்கள் குவித்தது. இந்தப் போட்டியில் ஐதராபாத்தின் உம்ரான் மாலிக் ஆட்டத்தின் 20வது ஓவரை வீசினார்.

அந்த ஓவரின் 4 வது பந்தில் பிரமிக்க வைக்கும் வேகத்தில் பந்துவீசினார். அதிகபட்சமாக மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் அந்த பந்தை அவர் வீசினார்.  இந்த பந்தை எதிர்கொண்ட ரோவ்மன் பவல் பவுண்டரி விளாசினார் .

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய அவரின் சாதனையை அவரே முறியடித்துள்ளார். இதற்கு முன் 154 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசிய  உம்ரான் மாலிக் தற்போது மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார் .

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »