Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட்- 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

முதலில் விளையாடிய லக்னோ அணி 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை:

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடரில் இன்று இரண்டாவதாக நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி லக்னோ அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான கே.எல் ராகுல் ஒரு ஓட்டத்தை கூட எடுக்காமல் ஓட்டத்தை அவுட் ஆகி வெளியேறினார். 

மற்றொரு வீரர்  டி காக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அவுட்டானார். 

தீபக் ஹூடா 41 ரன்னும், க்ருனால் பாண்ட்யா 25 ரன்னும் அடித்தனர்.  பதோனி 15 ரன்னும், ஸ்டோய்னிஸ் 28 ரன்னும், ஹோல்டர் 13 ரன்களும் எடுத்தனர்.  

இறுதியில் லக்னோ அணி 20 சுற்றுகள் முடிவில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி கொல்கத்தா அணி லக்னோ அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து மட்டையிலக்குகளை பறிகொடுத்து. 

அதிகபட்சமாக ஆன்ட்ரு ரஸ்ஸல் 45 ஓட்டங்கள் அடித்தார். ஆரன் பிஞ்ச் 14 ரன்னும், சுனில் நரேன் 22 ரன்னும் அடித்தனர். அந்த அணியின் மூன்று வீரர்கள் ஓட்டத்தை எதுவும் எடுக்காமலும்,  பிற வீரர்கள் ஒற்றை இலக்குடன் மட்டையிலக்குடை பறிகொடுத்தனர். 

கொல்கத்தா அணி 14.3 ஓவர் முடிவில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில் அதிபட்சமாக அவிஷ்கான் 3 மட்டையிலக்குகளும், ஹோல்டர் 3 மட்டையிலக்குகளும் வீழ்த்தினர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »