இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரசை, ஸ்வெரெவ் எதிர்கொள்கிறார்.
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று
நடைபெற்ற அரை இறுதி போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரஸ் உடன் ஸ்வெரெவ் மோதுகிறார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar