அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா 24 மற்றும் 26 பந்துகளில் தலா 43 ஓட்டங்கள் எடுத்தனர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 165 ஓட்டங்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் 24 மற்றும் 26 பந்துகளில் தலா 43 ஓட்டங்கள் எடுத்தனர். இதில், இருவருமே தலா நான்கு 6, 3 பவுண்டரிகளை எடுத்தனர். தொடர்ந்து, அஜிங்கியா ரகானே 25 ஓட்டங்கள், ரிங்கு சிங் 23 ஓட்டங்கள், ஆந்திரே ருசெல் 9 ஓட்டங்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 6 ஓட்டங்கள், ஜாக்சன் 5 ரன்களை எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் பும்ரா 5 மட்டையிலக்கு, குமார் கார்த்திகேயா 2 மட்டையிலக்கு, டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு மட்டையிலக்குடுகளை கைப்பற்றினர். பும்ரா 4 சுற்றில் 10 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகின்றன.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar