Press "Enter" to skip to content

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 சுற்றிப் போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு?

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் நடக்கிறது.

ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரு ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கு சேட்டன் சர்மா தலைமையிலான குழு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

தென் ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்படலாம். அவர் அதிகமான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி வருகிறார். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாள் இருந்துள்ளார். கோலி மற்றும் சீனியர் வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கப்படுவது கொள்கை முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென் ஆப்பிரிக்கா தொடரில் ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் விராட் கோலி இங்கிலாந்து பயணத்தில் புத்துணர்ச்சியுடன் களம் இறங்குவார். இந்திய அணி ஜூன், ஜூலையில் மூன்று 20 சுற்றிப் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 1 தேர்வில் ஆடுகிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். 12 ஆட்டங்களில் 216 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 19.63 ஆகும்.

விராட் கோலிக்கு தற்போது ஓய்வு தேவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »