ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் அந்த அணி 6 மட்டையிலக்கு இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 7 ஓட்டத்தில் அவுட்டானார். நிதிஷ் ரானா 26 ரன்னிலும், அஜிங்கியா ரஹானே 28 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 ரன்னிலும், ரிங்கு சிங் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
6வது மட்டையிலக்குடுக்கு சேர்ந்த சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரூ ரசல் ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்தது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். கடைசி சுற்றில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார்.
இதையடுத்து, 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 43 ஓட்டங்கள் அடித்தார்.
கேப்டன் வில்லியம்சன், ராகுல் திரிபாதியும் தலா 9 ரன்னுடன் வெளியேறினர். மார்க்ரம் 32 ஓட்டத்தை எடுத்தார்.
ஐதராபாத் அணி 20 சுற்றுகள் முடிவில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 123 ஓட்டங்கள் அடித்தது. இதனால் கொல்கத்தா அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ரசல் 3 மட்டையிலக்குகளும், டிம் சௌதி 2 மட்டையிலக்குடையும் கைப்பற்றினர்.
Source: Maalaimalar