Press "Enter" to skip to content

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு 179 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகின்றன.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

இதனால், முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 178 ஓட்டங்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வார் 29 பந்துகளில் ஒரு 6, 6 பவுண்டரிகள் எடுத்து 41 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து, தேவ்தத் படிக்கல் 39 ஓட்டங்கள், சஞ்சு சாம்சன் 32 ஓட்டங்கள், ரியான் பராக் 19 ஓட்டங்கள், டிரென்ட் பௌல்ட் 17 ஓட்டங்கள் (நாட் அவுட்), ஜேம்ஸ் நீஷம் 14 ஓட்டங்கள், ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ஓட்டங்கள் (நாட் அவுட்), ஜோஸ் பட்லர் 2 ஓட்டங்கள் எடுத்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 2 மட்டையிலக்குடுகளும், அவேஸ் கான், ஜோசன் ஹோல்டர் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்குடும் எடுத்தனர்.

இதையடுத்து 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள்.. சொதப்பிய சென்னை- குஜராத் அணிக்கு 134 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »