முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 41 ரன்களும், படிக்கல் 39 ரன்களும் அடித்திருந்தனர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி மட்டையாட்டம் தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 2 ஓட்டத்தை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் சாம்சன் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.
தொடர்ந்து ஜெய்ஸ்வால் 41 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரியான் பராக் 19, ஜேம்ஸ் நீஷம் 14 ஓட்டங்கள் அடித்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 சுற்றுகள் முடிவில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 179 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணியில் டி காக் 7 ஓட்டத்தை எடுத்த நிலையில் மட்டையிலக்குடை பறிகொடுத்தார். கேப்டன் கே.எல். ராகுல் 10 ரன்னுடன் வெளியேற, தீபக் ஹூடா 39 பந்துகளில் 59 ஓட்டங்கள் குவித்தார். குணால் பாண்ட்யா 25 ஓட்டங்கள் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் தலா 2 மட்டையிலக்குகளை கைப்பற்றினர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar