Press "Enter" to skip to content

ஜெய்ஸ்வால், அஸ்வின் அபாரம் – 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதமடித்து அசத்தினார்.

மும்பை:

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி மட்டையாட்டம் தேர்வு செய்தார். 

அதன்படி, முதலில் பேட்ட்டிங் செய்த சென்னை அணி 20 சுற்றில் 6 மட்டையிலக்குடுக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. தனி ஆளாகப் போராடிய மொயின் அலி 57 பந்துகளில் 93 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 26 ஓட்டங்கள் எடுத்தார். 

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹல், மெக்காய் ஆகியோர் தலா 2 மட்டையிலக்குகளை வீழ்த்தினர். 

இதையடுத்து, 151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 2 ஓட்டத்தில் அவுட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், படிக்கல் 3 ரன்னிலும், ஹெட்மயர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தாலும் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார். அவர் 59 ஓட்டத்தில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அஸ்வின் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 5 மட்டையிலக்கு இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அஸ்வின் 40 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »