ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது ஒளிக்கருவி (கேமரா)வில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.
மும்பை:
தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், தென் ஆப்ரிக்கா வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இதில் பட்லர் 16 போட்டிகளில் விளையாடி 4 சதம் உட்பட 824 ஓட்டங்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது ஒளிக்கருவி (கேமரா)வில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லர் ஒவ்வொரு முறையும் பெரிய ஷாட்டை அடிக்கும்போதும் ஒளிக்கருவி (கேமரா)வில் வான் டெர் டுசெனின் மனைவி லாரா தவறுதலாக கட்டப்படுகிறார். இதனால் பலர் லாராவை பட்லரின் மனைவி என தவறுதலாக நினைத்துவிட்டர். இதுகுறித்து கிண்டலாக பேசிய லாரா ‘நான் பட்லரை 2வது கணவராக தத்தெடுத்துவிட்டேன்’ என தெரிவித்தார்.
இதுகுறித்து லாரா கூறியதாவது:-
நான் ஜோஸின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும் போது சில முறை ஒளிக்கருவி (கேமரா)வில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறேன். பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் அவரை பார்த்தது கூட இல்லை.
என் கணவர் ரஸ்ஸி சில காரணங்களால் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதில் பட்லருக்கு உற்சாகத்தை தெரிவித்து வருகிறேன். இந்த பருவத்தில் நான் பட்லரை இரண்டாவது கணவராக தத்தெடுத்துவிட்டேன்.
இவ்வாறு கிண்டலாக கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar