Press "Enter" to skip to content

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியுடன் ஐபிஎல் நிறைவு விழா – அகமதாபாத்தில் கோலாகலம்

ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

அகமதாபாத்:

ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் ஐபிஎல் நிறைவு விழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி அசத்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »