Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட்- சாம்பியன் பட்டம் வென்றது குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டையாட்டம் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 39 ஓட்டத்தில் வெளியேறினார்.  

கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ஓட்டத்தில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ஓட்டத்தில் ஏமாற்றினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், மிகுதியாக பகிரப்பட்டது போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 130 ஓட்டத்தை எடுத்தது. 

குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 மட்டையிலக்கு, சாய் கிஷோர் 2 மட்டையிலக்கு, ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய குஜராத் அணியில் தொடக்க வீரர் சாகா 5 ரன்னுக்கும், மேத்யூ வேட் 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34 ஓட்டங்கள் அடித்தார். 

பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் 45 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

குஜராத் அணி18.1 ஓவர் முடிவில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 133 ஓட்டங்கள் அடித்தது. இதையடுத்து 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »