Press "Enter" to skip to content

ஐபிஎல் கோப்பையுடன் வெற்றி ஊர்வலம் சென்ற குஜராத் அணி

குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது என கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.

அகமதாபாத்:

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில், முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணியினர் குஜராத் தலைநகர் காந்தி நகரில் வெற்றிக் கோப்பையை ஊர்வலமாக சென்றனர்.

கோப்பையுடன் சென்ற வண்டியில் குஜராத் அணி வீரர்கள் உடனிருந்து வெற்றி கோஷங்களை எழுப்பினர். வழியெங்கும் ரசிகர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »