Press "Enter" to skip to content

எஸ்.ஐ. தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள்

எஸ்.ஐ. தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு வழங்கினார்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த மாதம் 25-ந் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் எஸ்ஐ தேர்வு நடைபெற உள்ளது.

இதையொட்டி மாவட்டத்தில் எஸ்ஐ தேர்வு எழுதும் காவல் துறையினருக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்ட கூடுதல்  காவல் துறை சுப்பிரண்டு, துணை காவல் துறை சுப்பிரண்டு, ஆய்வாளர் மற்றும் சுமார் 200 காவல் துறையினர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியின் போது திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்.ஐ. தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் சுமார் 80 காவல் துறையினருக்கு தேர்விற்கான 200 பயிற்சி புத்தகங்களை மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் வழங்கினார். 

மேலும் இந்நிகழ்வின் போது தேசிய மாவட்ட எஸ்.பி. தேர்வினை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்ற குறிப்புகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் தேர்வு தொடர்பான காவலர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து தேர்வினை நல்ல முறையில் எழுத வாழ்த்துக்களை தெரிவித்தார். 

மேலும் தொடர்ந்து மாவட்ட ஆயுதப்படையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »