பட மூலாதாரம், Sathyapriya Family.
சென்னை பரங்கிமலை தொடர் வண்டிநிலையத்தில் மாணவி ஒருவர் தொடர் வண்டிமுன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தையும் உயிரிழந்தோர். கொலைக் குற்றம்சாட்டப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆலந்தூரில் வசித்துவரும் மாணிக்கம் – ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யப்ரியா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ராமலட்சுமி, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிவருகிறார். இவர்களது வீட்டிற்கு எதிரே, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளன் என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் சதீஷ் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார்.
சத்யப்ரியாவும் சதீஷும் காதலித்துவந்த நிலையில், சத்யப்ரியாவின் வீட்டில் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. சதீஷ் எந்த வேலையும் செய்யாமல் திரிவதால், சதீஷை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என பெற்றோர் கூறினர். இதையடுத்து சதீஷைவிட்டு சத்யப்ரியா விலகத் துவங்கினார். இருந்தாலும் காதலைத் தொடரும்படி சதீஷ் வற்புறுத்திவந்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று கல்லூரி செல்வதற்காக பிற்பகல் 1.30 மணியளவில் பரங்கிமலை தொடர் வண்டிநிலையத்திற்கு வந்தார் சத்யப்ரியா. அப்போது அங்கு வந்த சதீஷ் மறுபடியும் சத்யப்ரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஏற்கனவே காதலித்துவந்ததைச் சொல்லி, சண்டை போட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.


இவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தபோது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார தொடர் வண்டிநடைமேடைக்குள் நுழைந்துகொண்டிருந்தது. ஆத்திரத்தில் இருந்த சதீஷ் தொடர் வண்டிமுன்பாக சத்யப்ரியாவைத் தள்ளிவிட்டார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
தொடர் வண்டிசத்தியப்பிரியா மீது ஏறி இறங்கியது. இதற்குப் பிறகு சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பட மூலாதாரம், Sathyapriya Family
சத்யப்ரியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தப்பி ஓடிய சதீஷைப் பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சத்யப்ரியாவின் தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சதீஷ் பிடிபட்டது எப்படி?
சதீஷின் கைபேசி சிக்னலை பின்தொடர்ந்தபோது அவர் துரைப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிவது தெரிந்தது. இதையடுத்து நேற்று இரவு அவர் கைதுசெய்யப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாணவி சத்யாவின் தந்தைக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தொடரும் தொடர் வண்டிநிலைய கொலைகள்

பட மூலாதாரம், Police
காதலிக்க மறுப்பதால், சென்னை மின்சார தொடர் வண்டிநிலையங்களில் பெண்கள் கொல்லப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2016ஆம் ஆண்டும் நுங்கம்பாக்கம் தொடர் வண்டிநிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் என்ற வாலிபர், சிறையிலேயே உயிரிழந்தார். அவர் மின்சார வயரை கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தது காவல் துறை. எனினும், இந்த மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
2021ஆம் ஆண்டில் தாம்பரம் தொடர் வண்டிநிலையத்தில் சுவேதா என்ற செவிலியர் கல்லூரி மாணவி, காதல் விவகாரம் தொடர்பாக கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதில் குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரன் என்பவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com