பட மூலாதாரம், Reuters
வடக்கு கிரீஸ் பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் மிகவும் மோசமான வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 36 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
செவ்வாய் கிழமை இரவு லரிசா நகரத்தின் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் தொடர் வண்டிஒன்று, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இந்த தொடர் வண்டிவிபத்தின் கோரத்தை வெளிப்படுத்துகிறது

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Reuters
தொடர் வண்டிவிபத்திலிருந்து பிழைத்துள்ளவர்களை தாங்கள் தேடும்போது பல சோகமான காட்சிகளை கண்டதாக மீட்பு படையினர் கூறுகின்றனர்.
” தொடர் வண்டிபெட்டிகளுக்குள் இருந்து நாங்கள் சிலரை பிடித்து இழுக்கும்போது சிலர் பிழைத்திருந்தனர், சிலர் காயமடைந்திருந்தனர், இன்னும் சிலர் உயிரிழந்திருந்தனர்” என்று விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஒருவர் அம்மாநில அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Getty Images
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த எந்தவொரு தெளிவான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், EPA

பட மூலாதாரம், EPA
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com