Press "Enter" to skip to content

வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர், தன்னுடைய வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ’தும்பா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி, தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற கீர்த்தி பாண்டியன் விவசாய பணிகளை செய்து அதை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது. தற்போது தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு ஆளாக துணிச்சலாக பிடித்த கீர்த்தி பாண்டியன், அதை அடிக்காமல் பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு விட்டுள்ளார். 

அதை வீடியோ பதிவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், கீர்த்தி பாண்டியனின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த இளம் நடிகையின் வீர செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »