Press "Enter" to skip to content

மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி – உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளது உண்மை தான் என தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்துள்ளார்.

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான். 

இதனிடையே, மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைவதை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். மேலும் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இது வடசென்னை படத்தின் 2-ம் பாகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ள படத்தையும் எல்ரெட் குமார் தான் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை வெளி மாநிலங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது அந்த படத்தை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்பியதும் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »