செளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது?
பிரிட்டன் உளவு பிரிவு மற்றும் மற்ற ஐரோப்பிய உளவு அமைப்புகளுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்த ஒரு மூத்த செளதி பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஓர் ஐரோப்பிய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அல் கொய்தாவின் வெடிகுண்டு திட்டத்தை முறியடிக்க உதவிய சாட் அல் ஜப்ரி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆதரவாளர்கள் குறிவைப்பதற்கு முன்னர் நாட்டை விட்டு தப்பித்துச் சென்றார். தற்போது அவரது குழந்தைகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவரது மூத்த மகன் காலித் கூறியுள்ளார்.
Source: BBC.com