மீண்டெழும் மற்றொரு தொற்று; சீனாவில் பரவும் புபோனிக் நோய் ஆபத்தானதா?
13-ஆம் நூற்றாண்டு மட்டுமல்லாமல் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும், சீனாவிலும் மீண்டும் பரவிய புபோனிக் என்ற பிளேக் நோய்க்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இந்த தொற்று பரவியவர்களில் 80 சதவீதம் பேர் மரணமடையும் அளவுக்கு அதன் தீவிரம் இருந்தது.
இந்நிலையில் தற்போது சீனாவின் தன்னாட்சி பகுதியான இன்னர் மங்கோலியாவின் உட்பகுதியில் புபோனிக் என்ற பிளேக் தொற்று உறுதியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Source: BBC.com