Press "Enter" to skip to content

இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்பு: 30 நொடியில் கொரோனா பரிசோதனை முடிவு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெறும் 30 நொடிகளில் கண்டறியும் அதி நவீன கருவியொன்றை தயாரித்துள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. சில நாடுகளில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை தொடக்கம் முதலே உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது.

இருப்பினும், பரிசோதனை கருவிகளின் உற்பத்தி, விலை, விநியோகம் உள்ளிட்ட காரணங்களால் இன்னமும் பல்வேறு நாடுகளில் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இஸ்ரேலை சேர்ந்த நானோசென்ட் என்னும் தனியார் நிறுவனம் ஒருவரது மூச்சை மட்டுமே அடிப்படையாக கொண்டு கோவிட்-19 நோய்த்தொற்றை கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »