Press "Enter" to skip to content

இந்தியா – சீனா எல்லை பதற்றம்: பேச்சுவார்த்தைக்கு பின் பேச்சை மற்றும் சீனா

லடாக்கில் ஏற்பட்ட எல்லை பிரச்சனைக்கு முழுக்க முழுக்க இந்தியாதான் காரணம் என்றும், தனது பிராந்தியத்தின் ஓர் அங்குலத்தைக்கூட இழக்க முடியாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

“தற்போது நிலவும் எல்லை பிரச்சனைக்கான காரணம் மற்றும் உண்மைகள் தெளிவாக உள்ளன. இதற்கான பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாவிடமே உள்ளன. தனது பிராந்தியத்தின் ஓர் அங்குல நிலத்தைக் கூட சீனாவால் இழக்க முடியாது. தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் காக்க சீன படைகள் உறுதியாகவும், திறன் வாய்ந்தவையாகவும், நம்பிக்கை மிக்கவையாகவும் உள்ளன,” என்று சீனாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்துவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வே ஃபெங் ஆகியோர் இடையே நடந்த சந்திப்பிற்குப் பிறகு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »