சைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு
சைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும் விடையில்லை.
110 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஒரு பயங்கரமான வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது போட்காமேன்னயா துங்குஸ்கா ஆற்றின் அருகே ஏற்பட்டது.
1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி, உள்ளூர் நேரப்படி 7 மணி 17 நிமிடத்திற்கு, பைகால் ஏரியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மலைப்பகுதியில் வசித்தவர்கள், நீல நிறத்தில் இருந்த ஒளிமயமான பொருள் ஒன்றை வானில் கண்டார்கள். சூரியனைப் போல பிரகாசமாக இருந்த அந்தப் பொருள் நகர்ந்ததையும் பார்க்கமுடிந்தது. சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பீரங்கியில் இருந்து வெளிப்படும் தோட்டா ஒலியைப் போன்று தொடரொலி எழுந்தது.
Source: BBC.com