பெண்ணிய செயல்பாட்டாளர், பத்திரிகையாளர் மற்றும் மனிதாபிமானியான ஹயாத், Fe-Male அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். லெபனாலில் பெண்ணியவாதிகளின் முன்னோடி அமைப்பாக இது உள்ளது. சமரசம் செய்து கொள்ளாத, காரணம் கூறிக் கொள்ளாத குணம் கண்ட ஹயாத், பெண்களுக்கும், சிறுமியருக்கும் நீதி, தகவல், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
தேசிய அளவில் பேரணிகள் நடத்துதல், ஊழலுக்கு எதிராக, தந்தைவழி ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்துதல், மாற்றத்தை ஏற்படுத்தக் கோருதல் என பல்வேறு வாய்ப்புகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
> சவால்கள் மற்றும் பின்னடைவுகள் இருந்தாலும், வாரிசு ஆட்சி முறைக்கு எதிராக பெண்கள் போராடி வெற்றி பெற்ற வரலாறுகள் உள்ளன. ஒற்றுமையாக இருந்தால், சகோதரித்துவம் மற்றும் அன்பு இருந்தால் நாம் தொடர்ந்து போராடுவோம், நம் குரல் பலம் பெருகும், நீதி மற்றும் பாலின சமத்துவமான எதிர்காலத்தைக் கேட்டு போராட முடியும்.
Source: BBC.com