அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை எதிர்த்தும், தேர்தல் முடிவுகளை மாற்ற வலியுறுத்தியும் ட்ரம்ப் ஆதரவு கும்பல் நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்து புதன்கிழமை கலவரத்தில் ஈடுபட்டது.
பைடன் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அவர் பெற்ற தேர்தல் சபை வாக்குகளை எண்ணி சான்றிதழ் அளிக்கும் வழக்கமான நடைமுறையை நாடாளுமன்றம் மேற்கொண்டிருந்தபோது இந்தக் கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் நிறுத்தப்பட்டு, உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊழியர்களும் பாதுகாப்பு கவச உடைகளும், வாயுத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் முக கவசமும் அணிந்து பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
வரலாறு காணாத இந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதைப் போலவே, இந்த சம்பவத்தின் படங்களும் விழிகளை விரியவைக்கும்.
இதோ அந்தப் படங்கள்:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com