Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு: என்ன நடந்தது?

அமெரிக்க அதிபராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகத்தில், வெள்ளை மாளிகையில் நடந்த முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? யார் அதை நடத்தியது தெரியுமா?

புதிய நிர்வாகத்தின் ஊடகச் செயலராக ஜென் சாகி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் இந்த முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். சுமார் 50 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.

“அமெரிக்க மக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான் பைடன் நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்” என்றார் ஜென் சாகி.

“என்னை இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர் பைடன் என்னிடம் கேட்ட போது, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வருவது எவ்வளவு முக்கியமானது என விவாதித்தோம்” என்றார் ஜென் சாகி.

அவர் பேசி முடித்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கான கேள்வி நேரம் தொடங்கியது.

உண்மையைக் கொண்டு வருவோம்

நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? அதிபர் ஜோ பைடன் மதிப்பை உயர்த்துவதற்கா? அல்லது வெளிப்படையாக உண்மையை பகிர்வதற்கா? என அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை சார்பில் முதல் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஜென் சாகி,

“சுதந்திரமான பத்திரிகைகளின் பங்களிப்பு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நாம் இருவரும் முரண்படும் நேரங்கள் வரலாம், ஆனால் நம் இருதரப்புக்கும், அமெரிக்க மக்களிடம் துல்லியமான உண்மையைக் கொண்டு செல்லவேண்டும் என்கிற ஒரு பொது நோக்கம் இருக்கிறது” என்றார்?

அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், உண்மையையும் கொண்டு வர தானும் அதிபர் பைடனுடன் பணியாற்றப்போவதாக குறிப்பிட்டார் ஜென்.

பொதுவாக அமெரிக்க ஊடக செயலர்கள், பத்திரிகையாளர்களுடன் நல்லுறவில் இருந்ததில்லை.

“டிரம்பின் பதவியேற்புக்குதான் வரலாறு காணாத அளவில் அதிக அளவில் பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்” என டிரம்ப் ஆட்சியின் முதல் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சியன் ஸ்பைசர் கூறி சர்ச்சையானது நினைவுகூரத்தக்கது.பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »