மியான்மர் ராணுவ ஆட்சி: ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு
மியான்மரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் இருந்து அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளியாவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார்.
பாதுகாப்புப் படையினர், ரப்பர் குண்டுகள் மற்றும் உண்மையான குண்டுகளால் சுட்டனர் என்று சாட்சிகள் கூறுகின்றன.
Source: BBC.com