சீனாவில் உறைபனியால் மாரத்தான் போட்டியாளர்கள் 21 பேர் பலி
சீனாவில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய தீவிர வானிலையில் சிக்கி மாரத்தான் போட்டியொன்றில் பங்கேற்ற 21 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான எல்லோ ரிவர் ஸ்டோன் காட்டில் (Yellow River Stone Forest) சனிக்கிழமை நடந்த 100 கிலோமீட்டர் ஓட்ட தூரம் கொண்ட அல்ட்ரா மாரத்தான் போட்டியின்போது அதிவேகமான காற்றுடன் கூடிய உறைபனி மழை பெய்தது.
Source: BBC.com