கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு மற்றொரு உயிர் காக்கும் புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க ஒரு விலை மலிவான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டு காலத்துக்குப் பிறகு, தற்போது மற்றொரு உயிர் காக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆனால் அந்த புதிய சிகிச்சை முறை விலை அதிகமானது. கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்ய மனிதர்களின் நரம்பு வழியாக ஆன்டிபாடிக்கள் செலுத்தப்படும். இது கொரோனாவால் ஏற்படும் அழற்சிகளை குறைப்பதற்கு பதிலாக வைரஸையே செயலிழக்கச் செய்யும்.
இந்த சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனையின் முடிவில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் மூன்றில் ஒருவரை குணப்படுத்த உதவும் எனத் தெரிய வந்திருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com