ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சௌதி அரேபியாவின் புதிய கொள்கை: அங்கு வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு என்னாகும்?
சௌதி அரேபியா தனது நாட்டின் ‘கன்சல்டன்சி’ எனப்படும் துறைசார் ஆலோசகர்களுக்கான பணிகளில் 40 சதவிகித உள்ளூர் மக்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.
முதலில் கன்சல்டன்சி பணிகளில் இருக்கும் சௌதி அரேபியர்களின் விகிதத்தை 2023 ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் இதை 35 சதவிகிதமாகவும், 2024, மார்ச் 25ஆம் தேதிக்குள் 40 சதவிகிதமாகவும் அதிகரிக்க செளதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சகம், செவ்வாய்கிழமை முடிவு செய்தது.
இந்த முடிவின் தாக்கம் பல தொழில்துறைகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிதி ஆலோசகர், வணிக ஆலோசனை நிபுணர், சைபர் பாதுகாப்பு ஆலோசகர், திட்ட மேலாண்மை மேலாளர், திட்ட மேலாண்மை பொறியாளர், திட்ட மேலாண்மை நிபுணர் போன்ற துறையினருக்கு இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com