ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதன் பின்னணி
டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்த நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நவம்பர் 6ஆம் தேதியன்று ஆஸ்திரேலிய காவல் துறையினர் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் தன்னிடம் அத்துமீறி பாலியல் வல்லுறவில் தனுஷ்க ஈடுபட்டதாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்திடம் தோல்வியுற்ற இலங்கை போட்டியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com